அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீட அதிகாரிகள் சிறிலங்காவில் கள ஆய்வு
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த கப்டன் ஜெப்ரி பென்டன் தலைமையிலான நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சிவில்- இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமெரிக்க படை அதிகாரிகள் குழு கொழும்பு வந்துள்ளது.
தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கிற்கு முன்னதாக இந்தக் குழு சிறிலங்கா வந்துள்ளது.
அமெரிக்க படை அதிகாரிகளின் இந்தக் குழு, நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியது.
இதன்போது, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சிவில்- இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி விளக்கிக் கூறியுள்ளார்.