மேலும்

இரணைதீவில் தங்கியிருந்து நிலமீட்புப் போராட்டம் நடத்தும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள இரணைதீவில் உள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவித்து, மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி, இரணைதீவு மக்கள் நேற்று படகுகள் மூலம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1992ஆம் ஆண்டில் போர்ச் சூழ்நிலையால் இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்  தம்மை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி, நேற்று 359 நாளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளின் உதவியுடன், மக்கள் தமது படகுகளில் வெள்ளைக்கொடியுடன் இரணைதீவுக்குச் சென்றனர்.

அங்குள்ள தேவாலயத்தில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து தமது நிலங்களை மீளத் தருமாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படையினருடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் பலனளிக்காத நிலையில், இரணைதீவு மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *