மேலும்

சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்குமாம் – குழப்பும் அமைச்சர்கள்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் இன்று காலை நடத்திய சந்திப்பை அடுத்து, நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அறிவித்திருந்தார்.

அதேவேளை, அத்தகைய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, எனவும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன சற்று முன்னர் கூறியுள்ளார்.

இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை வெளிப்படையாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *