மனச்சாட்சிப்படி வாக்களிக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்த முடிவைத் தாம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறவுள்ளதாக, நேற்று தம்மைச் சந்தித்த ஐதேக குழுவினரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.