றியர் அட்மிரலை விசாரணைக்கு முன்னிலைப்படுத்துமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவு
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக, றியர் அட்மிரல் ஆனந்த குருகேயை, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலைப்படுத்துமாறு கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நடந்த வழக்கு விசாரணைகளின் போது, சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான் லங்கா ஜெயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வாக்குமூலம் பெறுவதற்காக, வரும் 23 ஆம் நாள் றியர் அட்மிரல் ஆனந்த குருகேயை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலைப்படுத்துமாறு சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு அவர் பணித்துள்ளார்.