காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க்கொடி
காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களின் தெரிவு விடயத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணக்கப்பாடு இல்லை என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
‘காணாமல் போனோர் பணியக சட்டத்தை அமைச்சரவையே நிறைவேற்றியது. எனினும், அதில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நாம் ஒருபோதும், ஆசி வழங்கவில்லை.
அதுபற்றிய பெரியதொரு விவாதம் உள்ளது.
ஒரு கட்சியாக நாம் இன்னமும் அதுபற்றிக் கலந்துரையாடவில்லை. இன்று நடத்தும் கலந்துரையாடலுக்குப் பின்னர் நாம் எமது முடிவை அறிவிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.