மேலும்

Tag Archives: காணாமல் போனோர்

மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி

மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு, காணாமல் போனோர் பணியகம் நிதி அளிக்கும் என்று பணியகத்தின்  தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு

காணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது.

பட்டியல் எதுவும் இல்லை – சாலிய பீரிஸ் குத்துக்கரணம்

எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால், போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள்  அல்லது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிட முடியும் என்று தாம் கூறவில்லை என்று, காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்கிறது காணாமல் போனோர் பணியகம்

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள், அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இழப்பீட்டு பணியக சட்ட வரைவு விரைவில் அரசிதழில் – ஜெனிவாவில் சிறிலங்கா உறுதி

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியக சட்டவரைவு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சுதந்திரக் கட்சி போர்க்கொடி

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களின் தெரிவு விடயத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இணக்கப்பாடு இல்லை என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் பேச்சாளர் அடுத்தவாரம் அறிவிப்பு

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் நாள் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசை நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதன் ஏனைய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.

மக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன்

மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“முக்கியமான நகர்வு“ – அமெரிக்கத் தூதுவர்

காணாமல் போனோர் பணியகத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது, முக்கியமானதொரு நகர்வு என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.