ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்கா
பணச்சலவை செயற்பாடுகள் குறித்த ஆபத்துக் கொண்ட, நாடுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா, துனீசியா, ட்ரினிட்டாட் அன் டுபாகோ ஆகிய மூன்று நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு, ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 357 வாக்குகள் சிறிலங்கா உள்ளிட்ட மூன்று நாடுகளை கருப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டன. 283 வாக்குகள் அதற்கு எதிராக அளிக்கப்பட்டன. 28 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.