ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பு
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி கே.ரி.சித்ரசிறி இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இறுதி அறிக்கையை கையளித்தார்.
அதேவேளை, ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.