சிறிலங்கா கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாகப் பதவி உயர்வு
சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நேற்று- 2017 ஒக்ரோபர் 25ஆம் நாள் – தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், வழங்கப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்த அட்மிரல் சின்னையா 35 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதியாக கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் நாள் பதவியேற்ற, ட்ராவிஸ் சின்னையா, இன்றுடன் ஓய்வுபெறுகிறார்.
அவருக்கு சிறிலங்கா அதிபர் சேவை நீடிப்பை வழங்காமையினால், ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.