மேலும்

இந்திய- சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சமுத்திரவியல் ஆய்வு இன்று ஆரம்பம்

INS Sutlejஇந்திய- சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சமுத்திரவியல் ஆய்வின் இரண்டாவது கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. சிறிலங்காவின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில், இன்று ஆரம்பமாகும் இந்த ஆய்வு, டிசெம்பர் 21ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்த சமுத்திரவியல் ஆய்வுக்கு இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் சுற்லேஜ்’ என்ற ஆய்வுக் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் ஆய்வுப் பிரிவினர், இந்திய கடற்படைக் கப்பலில் உள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தி, ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய சிறிலங்கா கடற்படையினர் மேற்கொள்ளும் இரண்டாவது கட்ட சமுத்திரவியல் ஆய்வு இதுவாகும்.

ஏற்கனவே, ‘ஐஎன்எஸ் தர்ஷக்’ என்ற இந்தியக் கடற்படையின் ஆய்வுக் கப்பலைப் பயன்படுத்தி முதலாவது கட்ட ஆய்வு கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்டது. இது ஒன்றரை மாதங்கள் நீடித்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *