மேலும்

சுவிசில் இலங்கைத் தமிழ் அகதி சுட்டுக்கொலை

brissago-shootingசுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அகதிகள் நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று அதிகாலை 2 மணியளவில் சுவிஸ் காவல்துறை அதிகாரிகள் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு  அங்கு சென்றனர்.

அப்போது அகதிகள் நிலையத்தில் இருந்த 38 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதி ஒருவர், இரண்டு கத்திகளுடன், காவல்துறையினர் கூட்டிச் சென்ற இரண்டு அகதிகளையும் தாக்க முயன்றார்.

உடனடியாக காவல்துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கத்தியுடன் இருந்த இலங்கைத் தமிழ் அகதி மரணமானார்.

brissago-shooting

ரிசினோ மாகாணத்தில் உள்ள பிரிசாகோ நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *