சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொண்ட பாகிஸ்தான்
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குராம் டஸ்ட்கிர் கான் தெரிவித்துள்ளார்.
”பாகிஸ்தான் செனட் சபையில் உரையாற்றிய அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறிலங்கா, ரஸ்யா, சீனா, துருக்கி, பொஸ்னியா, கசாக்ஸ்தான், நோர்வே, ருமேனியா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்துள்ளது.
பல்வேறு நாடுகளுடன் 17 புரிந்துணர்வு உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு, அதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்களை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வெளியிடவில்லை.