லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில் துணிகளை வழங்க 600 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இருவரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், இருவரும் தாம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சிறைச்சாலை மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பேச்சாளர் துமிது பண்டார தெரிவித்தார்.