மேலும்

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

elections_secretariatஉள்ளூராட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஒக்ரோபர் மாதம் வெளியிடப்பட்டு, ஜனவரி மாத இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தாலும், மாநகர சபைகள் மற்றும் நகரசபைகள் கட்டளைச் சட்டம் இன்னமும் திருத்தப்படவில்லை. இதனைத் திருத்தம் செய்யாமல், உள்ளூராட்சித் தேர்தல்களை அறிவிக்க முடியாது.

இந்த கட்டளைச் சட்டங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்தக் குறைபாடுகள் இந்த மாதத்துக்குள் தீர்க்கப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடத் தயாராக இருக்கிறது.

புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் நடைமுறைக்கு வந்து விடும். இதன்படியே உள்ளூராட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றும் தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *