மேலும்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு

karu-jayasuriyaசிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த நாளை முடிவை அறிவிப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, நேற்று மதியம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து சில சட்டரீதியான விவகாரங்கள் இருப்பதால், சட்ட மா அதிபர் பணியகத்துக்கு அனுப்பி ஆலோசனை பெற்ற பின்னர், நாளை முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபியும் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *