கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று பிற்பகல், ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் கல்வி மற்றும் விவசாய அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த நிகழ்விலேயே, முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தப் பதவிகளையும் பொறுப்பேற்றுள்ளார்.
கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி விலகியுள்ள நிலையிலேயே, அந்த அமைச்சுப் பொறுப்புக்ளை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதேவேளை, சர்ச்சைக்குள்ளாகிய ஏனைய அமைச்சர்களான போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனும், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கமும் தொடர்ந்து தமது அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.