இரண்டு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புவார் சிறிலங்கா பிரதமர்
மருத்துவ பரிசோதனைகளுக்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு கடந்த மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடு திரும்புவார் என்று அவரது செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் அதையடுத்து. ஐ.நா சமுத்திரவியல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
அத்துடன், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசையும், கொமன்வெல்த் பொதுச்செயலர் பற்றீசியா ஸ்கொட்லன்டையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.