மேலும்

துறைமுக நகரத்தை கொழும்புடன் இணைக்க நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், தொடருந்துப் பாதை

portcity1.5 பில்லியன் டொலர் செலவில் சீன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரத்தை, கொழும்புடன் இணைப்பதற்கான நெடுஞ்சாலை, சுரங்கப்பாதைகள், மற்றும் தொடருந்துப் பாதை என்பன அமைக்கப்படவுள்ளன.

துறைமுக நகரை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், துறைமுக நகரில் இருந்து கொழும்புக்குள் நுழைவதற்கான இரண்டு சுரங்கப்பாதைகளை அமைப்பது குறித்து, சீன நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.

மேலும், ஒரு இலகு தொடருந்து போக்குவரத்து முறை கொழும்பு துறைமுக நகர் வரை நீடிக்கப்படவுள்ளது.

அதேவேளை, கடந்த மாதம் வரையில், துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கான 40 வீத பணிகள் முடிவடைந்துள்ளன என்று சீன நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

25, 30 ஆண்டுகளில் துறைமுக நகரின் பகல் நேர சனத்தொகை 2.5 இலட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 75 ஆயிரம் பேர் வதிவிட சனத்தொகையாக இருக்கும். இங்கு 21 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *