சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சுஸ்மா ஸ்வராஜ்
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தினார். (இரண்டாம் இணைப்பு)
புதுடெல்லியில் உள்ள தாஜ் பலஸ் விடுதியில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் குழுவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றது.
சிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் அனுர பிரியதர்சன யாப்பா, மலிக் சமரவிக்கிரம மற்றும் அதிகாரிகளும் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பை அடுத்து. இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து , கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், இந்திய, சிறிலங்கா அதிகாரிகள் குழுவினரும் பங்கேற்றனர்.