இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம் – ரணில்
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாக, இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, திருகோணதைலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
”திருகோணமலையில் இந்தியாவின் இயற்கை எரிவாயு மின்திட்டம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அது ஜப்பானுடன் இணைந்த கூட்டு முயற்சியாக இருக்கக் கூடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.