மேலும்

முன்னாள் படைத் தளபதிகள் மூவரிடம் விசாரணை

CIDசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி உள்ளிட்ட மூன்று ஓய்வு பெற்ற படை உயர் அதிகாரிகளிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் குமார ஹேரத்,  மேஜர் ஜெனரல் மனோ பெரேரா ஆகியோரிடமே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறும் பணிகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *