நவீன தொடருந்து தொகுதிகளை இந்தியாவிடம் வாங்குகிறது சிறிலங்கா
680 கோடி இந்திய ரூபா பெறுமதியான நவீன தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து தொகுதிகளை இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.
இந்திய தொடருந்து துறையின், துணை நிறுவனங்களில் ஒன்றான ரெயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்திடமே, இந்தக் கொள்வனவுக்கான ஆணையை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த தொடருந்துகள் மற்றும் இயந்திரங்கள் வாரணாசியிலும், சென்னையிலும் நவீன உள்ளூர் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்படவுள்ளன.
2011ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய கடன் திட்டத்துக்கு அமைய இந்த கொள்வனவுக். கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த தொடருந்து தொகுதிகள் விநியோகிக்கப்படும்.