நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவுகளை பகிரங்கப்படுத்த முடிவு
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பான பதிவுகள் வரும் மே 1ஆம் நாள் தொடக்கம் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைகள் பற்றிய தகவல்கள். மே மாதம் தொடக்கம் இணையத்தளத்தில் வெளியிடப்படும். இது குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசதரப்பில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்றும் நிலையியல் கட்டளையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.