அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் நாளை கொழும்பு வருகிறார்
அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
நாளை ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம் 7ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார்.
இதன் போது வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவுஸ்ரேலிய அமைச்சர் பார்வையிடவுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, பல்வேறு நிகழ்வுகளிலும் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் பங்கேற்பார் என்றும் கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.