மேலும்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணையாது – ரணில் அறிவிப்பு

ranilஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர், நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இணங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளும் ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா இன்னமும் இணைந்து கொள்ளவில்லை.

இந்த உடன்பாட்டில் சிறிலங்கா இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனின் அறிக்கையில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *