கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்த இத்தாலிய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
எதிர்வரும் 14ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் இந்தப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளது.
அவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியிலேயே இத்தாலியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது.