ஜெயலலிதா மறைவுக்கு மைத்திரி, மகிந்தவும் இரங்கல்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரங்கல் குறிப்புகளை ருவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது இரங்கல் குறிப்பில், மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவராக இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா, அவரது அன்புக்குரியவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வெளியிட்டுள்ள குறிப்பில், “இந்திய தமிழ் சமூகத்தின் இதயங்களை கொள்ளை கொண்டவர் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. எனது அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.