மேலும்

புடினுடன் பேச ரஸ்யா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

maithri-unசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஸ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

வரும் 2017 மார்ச் 23ஆம் நாள், ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடினை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மொஸ்கோவில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று, சிறிலங்காவுக்கான ரஸ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா தெரிவித்தார்.

சிறிலங்கா- ரஸ்யா இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

சிறிலங்காவின் பாதுகாப்புத் தளபாடத் தேவைகளை ரஸ்யாவினால் நிறைவேற்ற முடியும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

ரஸ்யாவின் ஆயுத தளபாடங்களை ஏனைய நாடுகளின் தயாரிப்புகளுடன் ஒப்பிடுவதற்கும், ரஸ்யத் தூதுவர் மறுத்துள்ளார்.

ரஸ்ய பாதுகாப்புத் தளபாடங்களே தரமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *