சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.