சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமருடன் இந்திய வெளிவிவாகர அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அதிபருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.
தீவிரவாதம், பொருளாதார ஒத்துழைப்பு, மற்றும் மீனவர் பிரச்சினை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.