மேலும்

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா பிரதமர் ரணில்

இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்று முற்பகல் புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இன்று காலை இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, இன்று முற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா பிரதமரைச் சந்தித்துப் பேசினார்.

ranil-delhi-1ranil-delhi-2ranil-delhi-5

இதன் பின்னர் இன்று மதியம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத் இல்லத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வரவேற்பு அளித்தார்.

அதையடுத்து, இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா பிரதமருக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகின.

சிறிலங்கா பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மதியபோசன விருந்தும் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *