மேலும்

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை – லால் விஜயநாயக்க

Lal Wijenayakeசமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று, அரசியலமைப்பு திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக, அந்தக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘அரசியலமைப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளது. இனிமேலும் அதில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது.

மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதான சாதாரணமான அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தது.

அரசியலமைப்பு மக்களுக்கானது என்பதால், அவர்களின் கருத்துக்கள் முக்கியமானது.

தென்னாபிரிக்க அரசியலமைப்பு மிகச் சாதாரணமானது. இலகுவாக விளக்கிக் கொள்ளக் கூடியது.

சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதையும், ஆனால் மாகாணசபை முறை மாற்றப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர் என்பதையும் எமது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *