மேலும்

வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பால் மரணம்

antony-jeganathanவடக்கு மாகாணசபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று காலை மாரடைப்பினால் மரணமானார். இன்று காலை அவர் முல்லைத்தீவில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக  மாஞ்சோலை மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அங்கு மரணமானார்.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், இலங்கைத் தமிழர் அரசுக் கட்சியினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியில் நிறுத்தப்பட்டு, மாகாணசபைக்குத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *