தகவல் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்
சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் உரிமை ஆணைக்குவுக்கான ஐந்து உறுப்பினர்களின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக தொழில் அமைச்சின் முன்னாள் செயலர் மகிந்த கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சட்டவாளர் கிஷாலி பின்டோ ஜெயவர்த்தன, முன்னாள் நீதிபதி சலீம் மர்சூவ், எஸ்ஜி.புஞ்சிஹேவா, ரி.செல்வக்குமரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.