மேலும்

சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை

mavai-senathirajahதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையில் சித்தார்த்தன் இணைந்து கொண்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையில் இலங்கை தமிழ் அரசு கட்சி இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும்,அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *