மேலும்

சிறிலங்கா அதிபருக்கான ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன் வந்தார் நிஷா பிஸ்வால்?

obamaஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்பு செய்தி ஒன்றுடனேயே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவி செயலர் நிஷா பிஸ்வால் கொழும்பு வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், இன்று அதிகாலை 5 மணியளவில், ஜெட் எயர்வேய்ஸ் விமானம் மூலம், மும்பையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிறப்பு செய்தி ஒன்றைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில், சிறிலங்கா அரசாங்கம் மெத்தனப் போக்குடன் செயற்படுவது குறித்து, நிஷா பிஸ்வால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம், கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *