தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், குற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து சீனாவுடன் உடன்பாடு ஒன்று செய்து கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அரசியல் கைதிகள் விவகாரத்தை, அரசாங்கம் சட்டரீதியான விடயமாக பார்க்கக்கூடாது. இதனை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான சந்தேசக நபர் வெளிநாட்டில் வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கம் அவரைக் கைது செய்யத் தவறியதால் தான், அவரால் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.