பிரகீத் எக்னெலிகொட கடத்தல் குறித்து மேலும் 3 மேஜர் ஜெனரல்களிடம் விசாரணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் மூன்று மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும், சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், இதுதொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சியிடம் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.