மேலும்

சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறார் மைத்திரி

prasanna_solangaarachchiசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவளைத் தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்காராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனக் கடிதத்தை வழங்கினார்.

பிரசன்ன சோலங்காராச்சி கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் முன்னாள் தலைவராவார்.

இவர் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தீவிர விசுவாசி என்பதுடன், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்டவர்.

அண்மையில் மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும், ஹிருணிகா, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஆறு பேரை கட்சியில் இருந்து நீக்கவும், மத்திய குழுவைக் கூட்ட கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பா முற்பட்ட வேளையில் நீதிமன்றம் ஊடாக அதற்குத் தடை உத்தரவு பெற்றவர் பிரசன்ன சோலங்காராச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

prasanna_solangaarachchi

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ஆதரவு அணியின் பலம் அதிகரித்துள்ள நிலையில், தனது தலைமைத்துவத்தை உறுதி செய்யும் வகையிலும், தனக்கு ஆதரவானவர்களின் பலத்தை அதிகரிக்கவும், புதிய அமைப்பாளர்களை மைத்திரிபால சிறிசேன நியமித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *