மேலும்

மீண்டும் கிளம்பியது வெள்ளை வான்- மூன்று சிறிலங்காப் படையினர் சிக்கினர்

white vanசிவில் உடையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மீரிஹான பகுதியில் வைத்தே நேற்றிரவு  7.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

தாம் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று, கைது செய்யப்பட்ட படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான உண்மை நிலையை அறிய இராணுவ காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை தொடர்பு கொண்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக இராணுவ காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும், சம்பந்தப்பட்ட படையினர் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வானில் சிறிலங்கா படையினர் சிவிலுடையில் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலைக் குழப்பும் இரகசியத் திட்டம் ஏதும் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, பிடிபட்ட படையினர் மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ள போதிலும், அவர் யார் என்பது தெரியவரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *