மேலும்

150 பிக்குகள் போட்டியிடுவதால் தேர்தல் திணைக்களத்துக்கு நெருக்கடி

elections_secretariatவரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பௌத்த விகாரைகளிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், இம்முறை 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியிடுவதால், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும், எங்கெங்கு அமைக்கப்படும் என்பது குறித்து இறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பொது பலசேனா 17 மாவட்டங்களில் போட்டியிடுகிறது.

ஏனைய அரசியல் கட்சிகளும் பௌத்த பிக்குகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *