மேலும்

மாதம்: May 2015

பாலச்சந்திரன் சண்டையிலேயே உயிரிழந்திருக்க வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா

வன்னியில் போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டதான குற்றச்சாட்டையும், பாலச்சந்திரன் பிரபாகரன் படுகொலைக் குற்றச்சாட்டையும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியேன்- மைத்திரி வாக்குறுதி

தேசிய பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் என்றும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை – சிறிலங்கா காவல்துறை

முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நடத்தப்பட்ட நினைவுநாள் நிகழ்வு தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு சிறிலங்கா காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்று, காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி ரவை வடிவ தீபத்தை ஏற்றி வைத்து போர் வெற்றியை கொண்டாடினார் மகிந்த

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜெகத் டயஸ் நியமனம் – கருத்து வெளியிடாமல் நழுவினார் ஐ.நா பேச்சாளர்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கருத்துக்காக காத்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – ரணில் அறிவிப்பு

வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு ஆண்டுகளாகியும் உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை – விக்னேஸ்வரன் உரை

போரிலே உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பான உண்மைநிலை இதுவரை வெளிக்கொணரப்படவில்லை. அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கான உண்மையான- நம்பகமான-  ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்படாமை,தமிழ்மக்கள் மத்தியில் விரக்தியை உருவாக்கியுள்ளது.

தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறிலங்கா படையினரின் பிடியில் க.வே.பாலகுமாரன்- மற்றொரு போர்க்குற்ற ஒளிப்படம்

இறுதிக்கட்டப் போரில், சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மற்றும் அவரது மகன் உள்ளிட்ட மூவர் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய போர்க்குற்ற ஒளிப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.