மேலும்

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியேன்- மைத்திரி வாக்குறுதி

matara-parade-2015 (1)தேசிய பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் என்றும், பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

போர் வெற்றியை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் இன்று காலை இடம்பெற்ற படைவீரர் ஞாபகார்த்த நாள் அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“போருக்கு பின்னர், நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்னின்று உழைத்த அரச தலைவர்கள் அனைவரையும் மதிக்கிறேன்.

அதற்காக உயிர்த் தியாகம் செய்த முப்படையினரையும் நினைவு கூருகிறேன்.

matara-parade-2015 (1)

matara-parade-2015 (2)

matara-parade-2015 (3)

matara-parade-2015 (4)

நல்லிணக்கமும் அபிவிருத்தியும், ஒன்றோடு ஒன்றாக இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கமாட்டேன்.

பாதுகாப்பு படைகளின் மனித வளங்கள் மேம்படுத்தப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான பௌதீக வளங்களும் பெற்றுக் கொடுக்கப்படும்.

அத்துடன் நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டின் மற்றுமொரு அத்தியாயத்துக்கான பக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில், முப்படையினரின் அணிவகுப்புகளும், போர் வாகனங்களின் அணிவகுப்பும் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *