மேலும்

முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு

mullivaikkal-memorial-2015இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் உயிர்ப்பலியெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலில் இன்று காலை நினைவுச்சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், இன்று காலை 10.30 மணியளவில், இந்த நிகழ்வு இடம்பெற்றது,

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதான நினைவுச்சுடரை ஏற்றி வைக்க, அதையடுத்து நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் அரசியல்கட்சிகள் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஈகச்சுடரை ஏற்றி வைத்தனர்.

mullivaikkal-memorial-2015 (1)

mullivaikkal-memorial

mullivaikkal-memorial-2015 (3)

mullivaikkal-memorial-2015 (4)

mullivaikkal-memorial-2015 (2)

இந்த நிகழ்வில், தமது உறவுகளை முள்ளிவாய்க்கால் மண்ணில் பறிகொடுத்தவர்கள் ஏராளமாக ஒன்று கூடி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *