மேலும்

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இணைந்து கொள்ள யோசித ராஜபக்சவுக்கு அனுமதி

mahinda-yoshithaசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், அவரது மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான லெப். யோசித ராஜபக்ச இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இணைந்து கொள்வதற்கு, லெப்.யோசித ராஜபக்சவுக்கு சிறிலங்கா கடற்படை அனுமதி வழங்கியுள்ளதாக, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தவுடன், சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்திருந்தார் லெப்.யோசித ராஜபக்ச.

எனினும், அதனை சிறிலங்கா கடற்படைத் தளபதி அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில், மூன்று மாத விடுமுறையில் அவர் தற்போது இருந்து வருகிறார்.

தன்னை தந்தையின் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு அவர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடமும், அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், கோரியிருந்தார்.

இதையடுத்தே, அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, லெப்.யோசித ராஜபக்ச, சிறிலங்கா கடற்படையில் எவ்வாறு இணைந்து கொண்டார் என்பது குறித்த கடற்படையின் உள்ளக விசாரணை தற்போது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *