இராஜதந்திர மரபை மீறினார் ரணில்
இராஜதந்திர மரபுகளை மீறி, கொழும்பில் நேற்று நடந்த இந்தியாவின் குடியரசு நாள் வரவேற்பு விழாவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறிலங்காவின் அமைச்சர்களே பிரதம விருந்தினர்களாக, இந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கமாகும்.
ஆனால், அந்த மரபை மீறி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய குடியரசு நாள் வரவேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்த வரவேற்பு விழாவில், கொழும்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
26 அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ,மற்றும் இந்திய, சிறிலங்கா நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா மீதும் பிராந்தியத்தின் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமான உறவுகளுக்கு அப்பால், இந்தியாவுடனான பொருளாதார ரீதியாக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படங்கள் – டெய்லி மிரர்