மேலும்

அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி

maithri-president (1)சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமாரும் பங்கேற்றனர்.

maithri-president (2)

maithri-president (1)

கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மைத்திரிபால சிறிசேன, கடந்த 9ம் நாள் சுதந்திர சதுக்கத்தில் நடந்த நிகழ்வில், நீதியரசர் சிறீபவன் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *