வாக்களிப்பின் போது தேர்தல் விதிமுறையை மீறிய மகிந்த குடும்பம்
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மெதமுலானவில் தனது குடும்பத்தினருடன் வாக்களிக்கச் சென்றிருந்த போது, தேர்தல் ஆணையாளரின் உத்தரவை மீறி, ஒளிப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மனைவி சிராந்தி ராஜபக்ச, மகன்கள், நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச, ராகித ராஜபக்சவுடன் வாக்களிக்கச் சென்றிருந்தார் மகிந்த ராஜபக்ச.
வாக்களிப்பு நிலையத்துக்குள், மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனும், கடற்படை அதிகாரியுமான, யோசித ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்துக்கள் எவரும், ஒளிப்படங்கள் எடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தரவிட்டிருந்தார்.
அதை மீறி மகிந்த ராஜபக்சவின் மகன் ஒளிப்படம் எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.