மேலும்

வடமராட்சியில் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு வீச்சு – மக்களை அச்சுறுத்த முயற்சி

grenadeவடமராட்சியில் வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், சிறிலங்காப் படையினர் எனக் கருதப்படுவோரால் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அல்வாய் சிறிலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணிக்குள், இன்று காலையில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரே இவ்வாறு கைக்குண்டை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வாக்களிப்பு நிலையத்துக்குப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ஏற்கனவே, தமிழ்மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் போலியான பிரசுரங்களை அரசதரப்பு வீசியிருந்தது.

அதனை வாக்காளர்கள் புறக்கணித்த நிலையிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *